
பொதுக்காரியங்களில் ஈடுபட்டு அதற்கான வலியை அனுபவிக்கும் மூத்தக்குடிமக்களின் வேதனைகளைக் கிண்டிக்கிளறி அவமானப்படுத்தும் செயல்களைச் செய்யும் இதுபோன்ற வாசகங்களால் நஞ்சாய், கிடுகிடுவென அகண்டு நீண்டுப்பரவும் அபத்தான பாதையை மேலும் ஆபத்து நிறைந்ததாக்கிக்கொள்கிறோமே அன்றி வேறொன்றுமில்லை. கெம்பேப் நிறுவனத் தொழிற்சாலியிலிருந்து கசியும் விஷ வாய்வினால் தமக்கு நோய்வருமோ உயிர் போகுமோ என்ற பயத்தில் அதை தடுக்கவேண்டுமேன போராட வந்திருந்த கூட்டத்தில் இந்த மூதாட்டியும் ஒருவர். இந்த மூத்தக்குடிமகளுக்கு உள்ள பொறுப்புணர்வை மதித்து அவரது நீதிக்காகப் போராடும் தன்மையைப் பாராட்டாமல் கேலி செய்வதால் இந்த செய்தி ஊடகத்திற்கு என்னதான் லாபமோ? லாபம் இல்லாமல் இருக்காது. ஒரு வேளை இந்த செய்தி நிறுவனம்.... பக்கம்..... இருக்கலாம்... அதனால்தான் இந்த வயது முதிர்ந்த பெரியவரை, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துப் போராடும் ஒரு இந்தியக் குடிமகளை டூருக்கு போராரு, எலக்சென் மீட்டிங்குக்குப் போராரு, கள்ளுக்கடைப் போராட்டத்துக்குப் போராருன்னு கேலி செய்யும் நிலையைச் சங்காக ஊதி, போராட்ட எண்ணத்தை வலுவிழக்கச் செய்கிறது. போராட்டத்தின் முடிவை தீர்மானித்து அதற்கேற்றார்போல் செயல்படும் இந்த மாய நீதிபதிகளினால் தர்மம் விஷமேறி செயலற்றுக்கிடக்கிறது. நம் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடும் வகையில் பல செயதிகளை, கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லும் இதே நிறுவனம் இப்போ இதைப் போன்ற மதிப்பைக் குறைக்கும் கேலிகளை களைந்துவிடுமானால் ஏழைகளுக்கும் கௌரவமாக வாழ வழிகிடைக்கும். வயதானவர், எதிர்க்க முடியாதவர், படிக்காதவர், இதைப் பற்றியான எதிர்வினைப் புரியாதவர் என்பதால்தான் இந்த கிண்டலைத் தவிர்த்து அவருக்கு ஊக்கமும் உறுதியும் உடன் நிற்கிறேன் என்ற ஆதரவும் கொடுத்தால், தவறுக்கு எதிராக போராட நினைக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் பலம் வரும். இதை இந்த செய்தி நிறுவனம்கொடுக்க முடியும். கொடுத்திருக்கிறது. யாருடைய மனமும் புன்படும்படியும் செயல்படாத செய்தி ஊடகம் நம் நாட்டின் உயிர்நரம்பாக விளங்கியிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தினமலரிடமும் இதை எதிர்பார்ப்போம்.
No comments:
Post a Comment